×

தரங்கம்பாடி அருகே பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள், சாராய மூட்டைகள் பறிமுதல்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே பெட்டி பெட்டியாக காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நண்டலாறு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்காலில் இருந்து வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் காரை சோதனை செய்தபோது காரில் அட்டை பெட்டிகளில் 1,680 குவார்ட்டர் மதுபாட்டில்களும், சாக்கு மூட்டைகளில் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 200 மி.லி சாராய பாக்கெட்டுகள் 2,150 இருந்ததும் தெரிந்தது. உடனடியாக போலீசார் மதுபாட்டில், சாராய பாட்டில்களுடன் காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரையும், யாருக்காக இது கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tharangambadi , Tharangambadi, Liquors, Liquor Bundles, Confiscation
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...