×

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு: சிகிச்சைக்காக வந்து ஊர் திரும்பும் போது சோகம்

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டியில் உள்ள டிரன்க் ரோட்டில் முகமது ரபி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக முகமது ரபி குடும்பத்தினருடன் வந்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் அனைவரும் மாலை காரில் ராயசோட்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது கே.வி.பள்ளி மண்டலம் மகால் கிராஸ் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது ராயசோட்டியில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த பீளேர் பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து கார் மீது வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முகமது ரஃபி 68,  நசீத் ஜான் 60,  இளைய மகன் அரூண் ரஷீத் 22, பெரிய மகனின் மனைவி காதீர் 23 ஆகியோர் உயிரிழந்தனர். பெரிய மகன் பரீத் பலத்த காயமடைந்த நிலையில் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பிளேர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : government bus crashes ,Kadapa ,Andhra Pradesh Four ,town ,Andhra Pradesh , Andhra Pradesh, Kadapa, State Bus, Tragedy
× RELATED ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என கூறி...