மும்பை : கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம், ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்க மாட்டோம் என அறிவித்துள்ளது. பல அரசு அமைப்புகள், ஏர் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.268 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.