புதுச்சேரி: புதுச்சேரி பாண்லே பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு மூலப்பொருட்கள் இல்லாததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரியில் மாலை பால் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாண்லே ஊழியர்களின் போராட்டம் காரணமாக 60,000 லிட்டர் பால் விநியோகம் தடைபட்டுள்ளது.