×

கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: மேலும் ஒருவருக்கு தொடர்பு என புகார்!

கோவை: கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது டிஎன்ஏ சோதனையில் தெரியவந்துள்ளதாக, சிறுமியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார். கோவை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கடந்த மார்ச் 25ம் தேதி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(32) என்பவரை கைது செய்தார். இவர் மீது பாலியல் பலாத்காரம், கொலை தடயங்களை மறைத்தல், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்கு பதியப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜராக சிறப்பு அரசு வக்கீலாக சங்கரநாராயணன் என்பவரை தமிழக அரசு நியமித்தது. இந்த வழக்கில், அரசு தரப்பு வக்கீல் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பில் ஆஜராகும் வக்கீல் இடையிலான இறுதிக் கட்ட வாதம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி ராதிகா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில், 26 சாட்சிகளும், எதிர் தரப்பில் ஆறு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வழக்கில் வரும் டிச.27ல்(நாளை) தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், சிறுமியின் தாயார் நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த வழக்கில் சிறுமியின் உடலில் மரபணு சோதனை நடந்தது. அதில், மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், வழக்கை மறுவிசாரணை நடத்தி, மற்றொரு குற்றவாளியை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள தடய அறிவியல் துறையில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் மேற்கோள் காட்டியும் இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். மேலும் டிஎன்ஏ ஆய்வு முடிவுகளை மேற்கோள்கட்டி இந்த வழக்கில் கூடுதலாக பெண் அதிகாரி நியமனம் செய்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் தீடிர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தோஷ்குமார் மட்டுமே வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்கை முடித்து நிலையில் தாயாரின் புதிய மனுதாக்கல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Coimbatore , Coimbatore, Pannimadai, Girl, Sexual Abuse, DNA
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...