சென்னை: சுனாமி நினைவு தினத்தையொட்டி சென்னை காசிமேடு கடற்கரையில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் அமைதி ஊர்வலமாக கடற்கரை பகுதிக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.