சென்னை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி, சபரிமலை, பழனி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள் நடை அடைக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதால் பிரத்தியேக கண்ணாடி மூலம் பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். நீலகிரி, கொடைக்கானல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தென்படுகிறது. காலை 9.30 மணிக்கு சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். வளைவு சூரிய கிரகணம் காலை 9.29 முதல் 9.32 மணி வரை 3 நிமிடங்களுக்கு தெரியும்.