×

நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக வேட்பாளர் போட்டியிடும் இடமாக இருந்தாலும், தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற இடமாக இருந்தாலும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 கடிதத்ததில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது.  தமிழ்நாட்டில் உள்ள 12ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் கூட்டங்கள் நடத்தி, மக்களை நேரடியாகச் சந்தித்தது திமுக. கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தங்களின் குறை கேட்க ஆளுந்தரப்பிலிருந்து ஒரு நாதியும் இல்லை என்ற குமுறலில் இருந்த மக்கள், அலை அலையாய் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, பரிதாபமான தங்கள் நிலையை விளக்கினர்.  
 ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தேர்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய்போல பரவிவிடும். அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன்.

நம்பிக்கை பெருகியிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. திமுக வேட்பாளர் போட்டியிடும் இடமாக இருந்தாலும், தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற இடமாக இருந்தாலும், வெற்றி ஒன்றே குறிக்கோள். வேறெதுவும் நம் கவனத்தைச் சிதறடித்துவிட அனுமதிக்கக் கூடாது.  கொள்ளையே கொள்கை என்று, நாளெல்லாம் லஞ்சம், பொழுதெல்லாம் ஊழல் எனத் திளைக்கும் இந்த கமிஷன் - கரப்ஷன் - கலெக்ஷன் ஆட்சியாளர்களை விரட்டியடித்திடுவதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள வாய்ப்புதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல். நாளைய  நல்லாட்சிக்குக் கட்டியம் கூற, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தோழமை  சக்திகளுடன் உறுதியாகத் துணை நின்று வென்று காட்டுவோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,DMK , Local election, DMK leader MK Stalin, letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...