×

தாளவாடி மலைப்பகுதியில் வேட்பாளர் காரில் இருந்த 1.13 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் பஸ் ஸ்டாப் அருகே நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஒரு பையில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 500 இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது காரில் வந்த நபர் எரகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பதும், இவர் திகினாரை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தாளவாடி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : hills ,Thalawadi ,candidate , Dalawadi Mountain, candidate, seized 1.13 lakh
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!