×

பட்டாபிராமில் விதவை பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், அணைக்கட்டுசேரி, ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (50).(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். தற்போது, ஈஸ்வரி மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர், ஈஸ்வரி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர், மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து, அவர் சத்தம்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர் வீட்டில் இருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து ஈஸ்வரி பட்டாபிராம் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த வெல்டர் வேலை செய்யும் அறிவழகன் (24) என்பவரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : widow ,Pattabram Pattabram ,arrest , Pattabram, widow girl, sexual harassment, plaintiff, arrested
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...