×

மாநகராட்சி வாகனங்களில் 10 பேட்டரிகள் திருட்டு

ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகையில் மாநகராட்சி குப்பை அகற்றும் வாகனத்திலிருந்து 10 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி மாநகராட்சி சார்பில் வீடு, வீடாக குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் குப்பைகளை அகற்றும் வாகனங்களை கலைஞர் நகரிலுள்ள பசுமைக்குடிலில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு குப்பை வாகனத்தில் இருந்து 10 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.45 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ரவிசந்திரன், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் பேட்டரிகளை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.

Tags : Corporation, Vehicles, 10 Batteries, Theft
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...