×

தாம்பரம் வனப்பகுதியில் கஞ்சா புகைத்த 5 பேர் கைது

தாம்பரம்: மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பேங்க் காலனி சாலையில் உள்ள வனப்பகுதியில் சிலர் தினமும் கஞ்சா அடித்து விட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக தாம்பரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தாம்பரம் காவல் நிலைய போலீசார் நேற்று சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த சில நபர்கள் போலீசை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். பின்னர், போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் மேற்கு தாம்பரம், மாந்தோப்பு  பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), கிஷோர் (19), நிஷாந்த் (19), அஜித் (18) மற்றும் மேற்கு தாம்பரம், காந்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (23) என்பதும், இவர்கள் தினமும் வனப்பகுதிக்கு வந்து கஞ்சா அடித்துவிட்டு பின்னர் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : forest ,Tambaram , Tambaram, forest area, 5 smokers arrested for smoking marijuana
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...