×

நாட்டை முன்னேற்ற பாடுபடும் பிரதமர் மோடியின் சொல் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது: நடிகர் பொன்னம்பலம் பேட்டி

தஞ்சை: மத்திய அரசு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரஜினி காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் பொன்னம்பலம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். இதற்கிடையே, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவிலிருந்து விலகி கடந்த 2017-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜ மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று தஞ்சையில் மரக்கன்றுகளையும் நலத்திட்ட உதவிகளை நடிகர் பொன்னம்பலம் வழங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் பொன்னம்பலம், “மத்திய அரசு எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும், வயதிலும், அறிவிலும், ஆற்றலிலும் உலகமே போற்றுக்கூடிய தலைவர் பிரதமர் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது. அவர் சொல்வது தான் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் இந்திய குடிமக்கள் பாதுகாப்பாகவும் வெளிநாடு தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும்” என்றார்.

நாடு முழுவும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பொன்னம்பலம் தனது கருத்தைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Modi ,Ponnambalam ,country , PM Modi's Hundred Years Right To Promote Country: Actor Ponnambalam Interview
× RELATED ஆம் ஆத்மியை அழிக்க பாஜக முயற்சித்தது: அரவிந்த் கெஜ்ரிவால்