×

32வது நினைவு தினம் எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை: உறுதிமொழி ஏற்பு

சென்னை: எம்ஜிஆரின் 32வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் நேற்று  அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமாகிய எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார்,வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ெவல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், அவைத் தலைவர் மதுசூதனன், கேபி.முனுசாமி, பொன்னையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து, நினைவிடத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைத்து நிர்வாகிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் மவுன அஞ்சலியும் செலுத்தினர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்களின் வீடுகளில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Memorial Day ,MGR Memorial Hon ,Deputy Chief Minister ,Chief Minister ,MGR Memorial , 32nd Memorial Day, MGR Memorial, Chief Minister, Deputy Chief Minister Hon
× RELATED திருவாரூர் வலங்கைமானில் ராஜிவ்...