சென்னை: குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வரும் 31ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், தங்க முலாம் பூசிய கவசம், புஷ்ப அலங்காரத்துடன் இரவு 12.01 மணிக்கு சோடசா தீபாரதனை தொடர் தரிசனம் நடைபெறும். இதில், அதிக அளவில் பக்தர்கள் வரவுள்ளதால் பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக குளியலறை, கழிப்பறை, சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சிறப்பு தரிசன வழி, போலீஸ் பாதுகாப்பு, பேருந்து வசதி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.