மும்பை: இன்று வந்துள்ள ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவின் மூலம் மக்கள் பாஜக அல்லாத கட்சிகளுடன் இருப்பதை தெளிவாகக் கூறுகிறது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவுக்குப் பிறகு, ஜார்கண்டிலும் பாஜகவை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.