சென்னை: வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்ததாக கதர் கிராம வாரியத்தின் முன்னாள் மேலாளர் ஜோஷ்வாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் கதர் வாரிய அலுவலகத்தில் 2001-2006 வரை பணியாற்றியபோது ஜோஷ்வா மீது முறைகேடு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றம் ஜோஷ்வாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.