சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் உள்ள நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.