×

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட மேலாண்டை தெருவில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆய்வு செய்தபோது, தங்களது பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சத்தில், அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை, டி.ஆர்.பாலு எம்.பி, எஸ்.ஆர்.ராஜா  எம்எல்ஏ ஆகியோர் நேற்று  பொது மக்களின் பயன்பாட்டுக்காக துவங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தாம்பரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் காமராஜ், வட்ட செயலாளர் கோபி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Baloo ,Drinking water purification plant ,Drinking Water Treatment Plant , Launched Drinking Water Treatment Plant, DR Baloo
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு