×

மனைவியை வீட்டை விட்டு விரட்டிய பல் மருத்துவர், தந்தையுடன் கைது

சென்னை: போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் கீர்த்திகா (27), பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்கும், மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணிபுரிந்து வரும் சூரியபிரகாஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. திருமணத்தின்போது அதிக நகைகள் வரதட்சணையாக கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், எனது கணவரின் நடவடிக்கை சரியில்லாததால், அதுபற்றி அவரிடம் கேட்டேன். இதனால், என்னை அடித்து  உதைத்து, குழந்தையுடன் வீட்டில் இருந்து விரட்டி விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திகாவின் கணவர் சூரிய பிரகாஷ் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீ அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவன் சரவணலோகன் (21), நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையம் வந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்தவர் ஜோசப் (29). இவர் மீது புளியந்தோப்பு, ஓட்டேரி மற்றும் பேசின்பிரிட்ஜ் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 9 மாதமாக தலைமறைவான ஜோசப்பை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் பார் ஊழியர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் (29) என்பவரை தாக்கி, 1500 ரூபாயை பறித்து சென்ற, திருவேற்காட்டை சேர்ந்த ரவுடி டெனி (என்ற) ஆண்டனி டெனிசன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : dentist ,house , Arrested by wife , dentist, father
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?