×

வேலூர் சிறையில் 2வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 19ம்தேதி முருகனை சந்திக்க உறவினர் கொண்டு வந்த உணவு பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகனை சந்தித்த உறவினர் கூறியுள்ளார். இதை கண்டித்து நேற்று முன்தினம் காலை முதல் முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும், நளினியும் உண்ணாவிரதம் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Murukan ,jail ,Vellore ,Vellore Jail , Vellore prison, Murugan, fasting
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்