×

காஷ்மீர் கிராமங்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  ஜம்மு காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லையோர கிராமங்கள், ராணுவ முகாம்களின் மீது துப்பாக்கி சூடும், சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில்  நேற்று காலையும், பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட மெந்தர், கிருஷ்ணாகதி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இது குறித்து, இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘காலை 10.15 மணி முதல் ராஜோரியின் நவுசாராவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. பூஞ்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட மெந்தர், கிருஷ்ணாகதி எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் 21ம் தேதி இரவு முதல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. இதில், பல கிராமங்கள் சேதமடைந்து உள்ளன என்றார்.


Tags : Pak ,Kashmir Villages ,Villages ,Army attack ,Kashmir ,attack ,Army , Villages of Kashmir, Pak. Army, attack
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை