சென்னை: பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அமமுகவினர் பாஜகவில் இணைந்தனர். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
அப்போது சென்னையை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி அமமுக பேரூர் செயலாளர் ராஜதேவன் அனைத்து வார்டு செயலாளர்கள் மற்றும் பேரூர் நிர்வாகிகளுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டடையை பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ஊடக பிரிவு தலைவர் பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.