×

இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேச்சு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை, : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கமிஷனர் அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி தென்சென்னை மாவட்டம் சார்பில்  ஹனீபா நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 16ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்தியாவில் முஸ்லிம்கள் குல்லா போட்டு சுதந்திரமாக திரிய முடிகிறது. இந்துக்கள் பாகிஸ்தானில் பொட்டு வைத்துக் கொண்டு திரிய முடியுமா? என்று பேசியுள்ளார்.

ஒரு பொதுவான பதவியில் இருந்து கொண்டு, மத உணர்வை தூண்டும் வகையில் மோதலை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும் பாகிஸ்தானின் பிரதமர் பேசுவதை இங்கு பேசுகிறார்கள் என்றுகூறி, இந்தியாவின் இறையாண்மையையும், தேசிய ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். அமைச்சரின் பேச்சு மத உணர்வையும், இன உணர்வைத் தூண்டும் வகையில், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். எனவே, இந்திய இறையாண்மை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajendra Balaji ,commissioner ,sovereignty ,office ,Indian , Rajendra Balaji, Minister of State , Speech , Reconciliation
× RELATED நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை,...