×

எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய பதிலடியில் 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி

ஜம்மு: பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலுக்கு, இந்தியா கொடுத்த கடும் பதிலடியில் அந்நாட்டு வீரர்கள் 2 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீரின் அக்னூர் மற்றும் சுந்தர்பானி செக்டாரில் நேற்று முன்தினமும், நேற்று அதிகாலையும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்திய வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஜம்மு ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கலோனல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ‘‘எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்த்து இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 2 வீரர்கள் இறந்து கிடந்ததை நாங்கள் பார்த்தோம்.  ஆனால், கடும் பனிமூட்டத்தால், அவர்களின் அடையாளத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் வீரர்களின் தகவல் தொடர்பு பரிமாற்றத்தை ஒட்டு கேட்டதிலும் இது உறுதியாகி உள்ளது,’’ என்றார்.


Tags : soldiers ,Pakistani ,Indian ,retaliation ,killing , India, 2 Pakistan, soldiers killed
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை