ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதுவிடுதி என்ற இடத்தில் சாராய வியாபாரி அருள்பாண்டியை கைது செய்ய கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு ஏட்டு செந்தில் சென்றார். அப்போது அருள்பாண்டியும், அவரது மாமா இளங்கோவனும் சேர்ந்து ஏட்டுவை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் ஏட்டுவை தாக்கும் வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை எஸ்.பி. மகேஸ்வரன், சாராய வியாபாரிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருவோணம் போலீசார், இளங்கோவனை கைது செய்தனர். அருள்பாண்டியை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.