×

சசிதரூர் எம்பிக்கு நீதிமன்றம் கைது வாரன்ட்

திருவனந்தபுரம்: குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக புத்தகம் எழுதியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் சசிதரூர் எம்பிக்கு நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்நிலையில் இவர் ‘தி கிரேட் இந்தியன் நாவல்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்து ஆபாச கருத்துக்களை எழுதியிருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்தியா குமார் என்பவர் திருவனந்தபுரம் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த புகார் தொடர்பாக சசிதரூர் மீது நீதிமன்றம் நேரடியாக வழக்குப்பதிவு செய்தது. கடந்த மாதம் விசாரணைக்கு ஆஜராக சசிதரூருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று அவருக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Tags : Sasidarur MB, court, arrest warrant
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...