வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்திருந்தது. அதனை வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர்கள் சங்கத்தலைவர் விசுவநாதன், பொருளாளர் நாராயணன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையிலான 80க்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளிகள் நேரடியாக பள்ளிக்கே சென்று சீரமைத்தனர்.
இதுகுறித்து தச்சு தொழிலாளிகள் சங்க பொருளாளர் நாராயணன் கூறியதவாது: தச்சு தொழிலாளிகள் சங்கம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக அரசுபள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மேஜை, நாற்காலிகளை சீரமைத்து கொடுக்கின்றோம். எங்களது பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் பயின்று வருகின்றனர். அதேபோல் அனைத்து பிள்ளைகளும் எந்த சிரமமும் இன்றி கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆண்டுக்கு ஒரு முறை அரசு பள்ளிகளுக்கு சென்று தனியார் அமைப்புகளின் நன்கொடை பெற்று, இலவசமாக மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரப்பொருட்களை சீரமைத்து கொடுக்கிறோம்’ இவ்வாறு அவர் கூறினார்.