×

குட்டையில் நகர முடியாமல் கிடந்தது 3 வாத்துகளை விழுங்கிய பத்து அடி மலைப்பாம்பு

திருப்புத்தூர் :சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், பாரதி நகரில் குடியிருப்பு பகுதியின் அருகே ஒரு குட்டை உள்ளது. இங்கு சுமார் 10 அடி நீளமுள்ள வெங்கனத்தி இனத்தை சேர்ந்த சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. குட்டையில் இருந்த 3 வாத்துகளையும் விழுங்கியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி மலைப்பாம்பை பிடித்தனர். அப்போது வாயில் இருந்த ஒரு வாத்தை பாம்பு விட்டு விட்டது. பின்னர் மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மதகுபட்டி மண்மலை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதேபோன்று இப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வீட்டின் அருகே கட்டுவிரியன் பாம்பை விழுங்கிய நிலையில் கிடந்த ஒரு மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : fire department ,Thirupathur Python , sivagangai District, Python,Thirupathur ,Duck
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு