கரூர்: கரூர் தாந்தோணிமலை அசோக் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(19). கல்லூரி மாணவர். நேற்று இரவு வீட்டுக்கு அருகில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நண்பர்கள் மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனின் நண்பர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.