×

மாவட்ட வாரியாக 24 காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதனால், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் என்பதால் மாவட்ட அளவிலே கூட்டணி கட்சிக்குள் இடங்களை பிரித்துக் கொண்டனர். இதனால் அந்தந்த மாவட்ட தலைவர்களே பணிகளை செய்வதற்கு ஒவ்வொரு கட்சியிலும் அதிகாரம் வழங்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட வாரியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரசார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களை தமிழக காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. அதாவது காங்கிரஸ் மாவட்ட வாரியாக எம்பிக்கள் வசந்தகுமார், மாணிக்கம் தாகூர், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட 24 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் தலைவர்கள் பிரசாரம், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பிரசார கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து செய்யும் வகையிலும், மாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்து ஒவ்வொரு பணிகளையும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : District ,Congress ,trustees , 24 Congress trustees
× RELATED மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!