சென்னை: மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக, டிச.2ம் தேதி சிவசுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் அருகே 20 அடி உயர தீண்டாமை சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். இதுதொடர்பாக, சிவசுப்பிரமணியன் கைதானார். இவரது ஜாமீன்மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சேஷசாயி, ‘சிவசுப்பிரமணியனுக்கு ரூ.1 லட்சம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மதுரையில் தங்கி மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார்.