சென்னை: உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டத்தில் பொங்கல் பரிசு திட்டம் அமல்படுத்த கூடாது என அரசுக்கு ஆணையிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை 27 மாவட்டத்தில் பொங்கல் பரிசு திட்டத்துக்கு தடை கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் அலமேலு வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.