சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் சிவ சுப்பிரமணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் சிவ சுப்பிரமணியன் மதுரையில் தங்கி, மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.