×

அரபிக்கடலில் அசத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா: ஆழத்திற்கு சென்று சல்யூட் அடித்தார்

கார்வார்:  கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளில் பிரபலமானவர் டி.ரூபா. தற்போது அவர் ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தனது மகன் மற்றும் மகளுடன் வட கனரா மாவட்டம் முருடேஷ்வராவுக்கு வந்தார். இங்குள்ள நேத்ராணி அட்வெஞ்ச்சர் அமைப்பின் உதவியுடன் அரபிக் கடலின் ஆழத்திற்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்க முடிவு செய்தார். அதன்படி  கடலில் டைவ் அடித்து கடலின் ஆழத்திற்கு சென்றார். அப்போது அவரால் மூச்சை  அடக்க முடியவில்லை. மூச்சுவிட மிகவும் கஷ்டப்பட்டார். இதனால் மேலே வந்துவிட்டார். என்றாலும் முயற்சியை கைவிடாமல் மீண்டும் ஒருமுறை  ஆக்சிஜன்  நிரப்பிய சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு இரண்டாவது முறையாக கடலில்  குதித்து ஆழமான பகுதிக்கு சென்றார். அத்துடன் ஆழத்தில் மிதந்தபடி  சல்யூட் அடித்து தனது திறமையை ரூபா வெளிப்படுத்தினார். சுமார் 45  நிமிடங்கள் அவர் கடலின் ஆழத்தில் இருந்தபடி இயற்கை அழகை ரசித்துவிட்டு மேலே  வந்தார்

Tags : officer ,Rupa: The IPS ,Arabian Sea , Arabian Sea, IPS officer Rupa, Salute
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...