×

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:  தமிழ் இலக்கிய உலகில் புதிய கருதுகோளாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதி, பல விருதுகளைக் குவித்து, கரிசல் மண்ணுக்கும், நெல்லைச் சீமைக்கும் எழுத்தாளர்கள் பெருமை சேர்த்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சோ.தர்மனுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழ் எழுத்தாளர்  சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்த சோ.தர்மன் இதுபோல் பல்வேறு விருதுகளை பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் தமிழகத்தின் கரிசல் இலக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவரான எழுத்தாளர் சோ.தர்மனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ‘சூல்’ நாவலுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Tags : Leaders ,author ,Dharman ,So.Dharma , author congratulates So.Dharma, the leaders
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...