×

32வது நினைவு தினத்தையொட்டி எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர், துணைமுதல்வர் அஞ்சலி

சென்னை: எம்.ஜி.ஆரின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதுகுறித்து, அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 32வது ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி காலை 10.35 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதைதொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MGR ,Anjali ,deputy leader ,occasion ,deputy , occasion , 32nd commemoration, MGR commemorates the first and the first deputy, Anjali
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...