×

தூத்துக்குடி அருகே பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தையை கம்பால் அடித்து கொன்ற தாய், சகோதரி கைது: ஏமாற்றிய டிவி மெக்கானிக் போக்சோவில் சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை: தூத்துக்குடி அருகே பிளஸ் 1 மாணவிக்கு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்ததுடன் கம்பால் தாக்கிக் கொன்ற  மாணவியின் தாய், சகோதரியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்1 மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதுகுறித்து மாணவியிடம் அவரது தாயும், சகோதரியும் விசாரித்த போது கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்,  மாணவிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இறந்துவிட்டதாகக் கூறி அதை மாணவியின் சகோதரி வீட்டில் புதைத்தனர்.

தகவலறிந்த புதுக்கோட்டை போலீசார் சென்று மாணவி, அவரது சகோதரி, பெற்றோரிடம் விசாரித்தனர். இதில் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரியும், டி.வி. மெக்கானிக்குமான ராஜூ (48) என்பவர் ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் மாணவியின் சகோதரி வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் நேற்று முன்தினம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முக்கிய உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், 8 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மூச்சு திணறடித்ததுடன் கம்பால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவியின் தாய், அவரது சகோதரி ஆகியோர் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் வாயை பொத்தி மூச்சு திணறடித்ததுடன் மண்வெட்டி கம்பால் தாக்கிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் குழந்தையை அவரது தாய், சகோதரியே கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : baby girl ,sister ,student ,Thoothukudi , Thoothukudi, plus 1 student, newborn, mother, sister, arrested
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...