×

திருக்காட்டுப்பள்ளி அருகே பாராக மாறிய விஏஓ அலுவலக வளாகம் இரவில் அத்துமீறி குடிமகன்கள் கும்மாளம்

திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தோகூர் சாலையில் அகரப்பேட்டை கிராமத்தில் விஏஓ அலுவலகம் உள்ளது.  இங்கு விஏஓவாக இருப்பவர் அருண் பிரசாத்.  இவர் வேலை முடிந்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றதும் இரவு நேரங்களில் விஏஓ அலுவலக வளாகத்திற்குள் குடிமகன்கள் புகுந்து அலுவலக வளாகத்தை பாராக மாற்றி விடுகிறார்கள். தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்து வந்ததால் காலையில் அலுவலகம் வந்ததும் அங்கு கிடக்கும் காலி பாட்டில்கள், எச்சில் இலைகள், காலி கப்புகள் ஆகியவற்றை சுத்தம் செய்வது தான் விஏ.ஓவின்  முதல்வேலையாக இருந்து வந்தது.

இதுபற்றி விஏஓ அந்த கிராமத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இந்த அலங்கோலத்தை காட்டி, இரவில் இந்த அநியாயங்கள் நடக்காதவாறு சொல்லி வையுங்கள் என கூறினார். ஆனாலும் இரவு பார் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.இதனால் வேதனையடைந்த விஏஓ, அலுவலக கதவில் “அன்பான வேண்டுகோள்” அகரப்பேட்டையில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலகம் என்பது மக்களுக்கான அலுவலகம். இங்கு மாணவ, மாணவிகள் முதல் பெரியவர் வரை பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு மது அருந்துவதும், பாட்டில்களை விட்டு செல்வதும் நாகரீகம் அற்றது. இதுபோன்ற தவறு செய்யும் சிலர் இனி இந்நிகழ்வு நடக்காக வண்ணம் நடவடிக்கைகளை மாற்றி கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். “சுய ஒழுக்கமே நற்சமுதாயத்தின் வேர்” என்று எழுதி ஒட்டியுள்ளார்.இதன் பிறகாவது குடிமகன்கள் திருந்துவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஏஓ. இதற்கு பிறகும் தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Tags : VAO ,office complex ,Thirukattupalli ,school , VAO office ,complex , Thirukattupalli ,school
× RELATED கோடைவிடுமுறையை கொண்டாட கலெக்டர்...