×

தமிழக மாநகராட்சி பகுதிகளில் பாஜ சார்பில் வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ கட்சியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 7 பேர் இணையும் நிகழ்ச்சி  கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர்கள் பாஜவில் இணைந்தனர். அப்போது, முன்னாள் எம்.பி. இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் மண் கோலோச்ச வேண்டும். பாஜ குறித்து பொய் பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்து பாஜ சார்பில் வரும் 20ம்தேதி தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : protests ,BJP ,Tamil Nadu Municipalities ,Tamilnadu Corporation ,Announcement , Tamilnadu Corporation, Bharatiya Janata Party (BJP), 20th Announcement
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...