×

போட்டியின்றி தேர்வான மகிழ்ச்சியில் பஞ். வார்டு உறுப்பினர் மாரடைப்பால் மரணம்: திருமங்கலம் அருகே சோகம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், பொன்னமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள வீரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர், கருமாத்தூரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள். ஆனந்தன் பொன்னமங்கலம் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து யாரும் மனு செய்யாததால், ஆனந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தகவலறிந்த ஆனந்தன் மகிழ்ச்சியடைந்து பொன்னமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை சென்றார்.

பின், அங்கிருந்து கருமாத்தூரில் உள்ள தனது கடைக்கு சென்று வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே கடையில் மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆனந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போட்டியின்றி தேர்வான மகிழ்ச்சியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அவர் இறந்ததையொட்டி, அந்த வார்டில் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tragedy ,Ward ,Thirumangalam Panchayat ,death , Panchayat. Ward member, heart attack, death, Thirumangalam, tragedy
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி