×

சோத்துப்பாறை அணையில் 78 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி: சோத்துப்பாறை அணையில் 78 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை தொடர்ந்து 78-வது நாளாக தண்ணீர் நிரம்பி வழிகிறது.  தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை  126.28 அடி மொத்த உயரம் கொண்டது. மேற்குதொடர்ச்சி மலை, மற்றும் கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் கடந்த நவம்பர் மாதம் அணை நிரம்பியது.  மேலும் அணைக்கு வினாடிக்கு 42 கனஅடி நீர் வரும் நிலையில் அது முழுமையாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து கடந்த 78 நாட்களாக அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரியகுளம், பாப்பியன்பட்டி கண்மாய், தாமரைக்குளம் கண்மாய் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் நீர்மட்டம் 78 நாட்களாக 126 புள்ளி 28 அடியாக நீடிக்கிறது. இதனால் தேனி மாவட்டம் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Tags : Sothuparai Dam , Farmers ,Sothuparai Dam, capacity ,78 days
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற...