×

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து சாவு

புழல்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், புழல், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. சோழவரம் ஒன்றிய அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜேந்திரன் (59), தனது மகள் வழக்கறிஞர் பேபியுடன், புதிய எருமைவெட்டி பாளையம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக கூட்டணி கட்சியினர், 11வது வார்டு தமாகாவை சேர்ந்த லலிதாவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இதனால் ராஜேந்திரனும் அவரது மகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு அங்குள்ள கடையில் சான்றிதழ்களை ராஜேந்திரன் ஜெராக்ஸ் எடுத்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags : AIADMK ,Candidate ,death , Candidate, come to file, AIADMK, fainting, death
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...