×

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வாழைப்பழ குடோனுக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காநகரில் வேல்முருகன் என்பவரின் வாழைப்பழ குடோவுன் உள்ளது. இங்கு ரசாயனம் தடவி பழங்கள் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி விஜய லலிதாம்பிகை மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாழைப்பழ தார்களில் ரசாயனம் தடவி பழுக்க வைத்தது தெரிந்தது. குடோவுனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, மற்ற பகுதிகளில் சோதனையை தொடர உள்ளனர்.

Tags : Palladam ,Tirupur , Tirupur, Banana Goodon, Seal
× RELATED அண்ணாமலை பிரச்சாரத்தின் போது கேள்வி...