கொல்கத்தா: குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணியாக சென்றனர். மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து சென்றனர். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.