×

ஓசூர், சூளகிரியில் 65 யானைகள் அட்டகாசம் வீடுகளில் முடங்கிப்போன விவசாயிகள்: வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கோரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு மற்றும் சூளகிரியில், யானைகள் முகாமிட்டுள்ளதால் விளைநிலங்களுக்கு செல்ல பயந்து விவசாயிகள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் 65க்கும்  மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதேபோல், சூளகிரி அருகே உள்ள  பீர்ஜேப்பள்ளி வனப்பகுதியில் 3 குட்டிகளுடன் 12 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், வனப்பகுதியையொட்டியுள்ள 20 கிராமங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே, முகாமிட்டுள்ள யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியில் ஓசூர்-ராயக்கோட்டைக்கு செல்லும் மாநில தேசிய நெடுஞ்சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இந்த சாலையையொட்டி, இரண்டு பகுதிகளும் வனப்பகுதியாக உள்ளதால் யானைகள் பல குழுவாக பிரிந்து சுற்றி வருகின்றன. அவ்வப்போது, சாலையை கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியவாறு மெதுவாக செல்ல வேண்டும் என்றும், அதிக எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் இரவு நேரங்களிலும், அதிகாலையிலும், விவசாயிகள் விளை நிலத்திற்கு செல்ல வேண்டாம். பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பென்னிக்கல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, விறகு எடுக்கவோ புளியந்தோப்பு, கோடூர் பள்ளம் பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பயந்துபோன விவசாயிகள், விளைநிலங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Hosur ,Sulagiri ,homes , 65 elephants , Hosur, Sulagiri , paralyzed homes, demand ,drive away
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...