×

மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சி: இன்றும், நாளையும் நடக்கிறது

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று (14ம் தேதி) ஆலந்தூர், திருமங்கலம், வடபழனி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை நிகழ்ச்சி நடக்கிறது.  15ம் தேதி டிஎம்எஸ், ஆயிரம்விளக்கு, கிண்டி, வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், விமான நிலையம், அண்ணா நகர், வடபழனி, திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடத்துகின்றனர். இங்கு இசை நிகழ்ச்சி நடத்த ஆர்வம் உள்ள இளைஞர்கள் pro.cmrl.@tn.gov.in மற்றும் ampr.cmrl2.@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Evening concert ,stations ,Metro Railway ,railway stations , Metro stations, concert
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...