×

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்: சிசிடிவி கேமரா பதிவால் பரவசம்

அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் அம்மன் ஊஞ்சலில் ஆடுவது போன்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 10ம் தேதி கார்த்திகை தீபத்தன்று இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. 11ம் தேதி காலை கோயில் செயல் அதிகாரி சரவணன் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தார். அதில், நடை சாத்தப்பட்ட பிறகு இரவு 11 மணிக்கு கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடுவதுபோல் ஒளி அசைந்தாடியது தெரிந்தது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த ஒளிபிம்பம் குறித்து கோயில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, சுமார் இரண்டு மணி நேரம் அம்மன் ஊஞ்சலில் ஆடுவதுபோல் தெரிந்தது என கூறினார். இந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக பத்ரகாளியம்மனை தரிசிக்க வந்து செல்கின்றனர்.

Tags : Amman ,temple sanctum Swing ,Anthiyur Bhadrakaliyamman , Swing
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்