×

ஊழல்களை அம்பலப்படுத்துவேன் வாரியத்துக்கு குல்பதீன் மிரட்டல்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் குல்பதீன் நயிப். உலக கோப்பை தொடரில்  ஆப்கான் அணி ஒரு வெற்றிக் கூட பெறாததையடுத்து  கேப்டன் பொறுப்பில் இருந்து நயிப் நீக்கப்பட்டார். ஆனால் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக  டூவிட்டரில்  அவர் வெளியிட்டு வரும் கருத்துகள்   ஆப்கான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.   குல்பதீன், ‘ ஆப்கான் மக்களே  கிரிக்கெட் வாரியம்,  வீரர்கள்  குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதால் பேசுகிறேன். முன்பே ஏன் பேசவில்லை என்று கேட்கலாம், ‘அப்போது கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தவறுகளை சரி செய்கிறோம்’ என்று உறுதி அளித்தனர். அதனால் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

உலக கோப்பையில் நாம் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிப் பெறாததற்கு காரணம் வீரர்கள் பலர் வேண்டுமென்றே  சரியாக விளையாடவில்லை.  அது குறித்து வாரியத்துக்கு தெரியும்.  ஊழலில் திளைக்கும் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இனியும்  சரிச் செய்யவில்லை என்றால் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.


Tags : Gulbadheen ,Board , expose the scandals, culpability , intimidation , the Board
× RELATED வல்லூர் அனல் மின் நிலைய பராமரிப்பு பணி...