×

லேப்டாப் திருடுபோனதா? : அறிக்கை அளிக்க அரசு உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டியதில் எத்தனை லேப்டாப் திருடு போனது என்று விவரம் தர வேண்டும் என்று சிறப்பு திட்டத்துறை கணக்கு கேட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவார்கள். சில காரணங்களால் மாணவர்களுக்கு உடனே வழங்காமல் இருந்ததால் திருடுபோனது.  

இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சிறப்புத் திட்டத்துறை சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2011-2012ம் கல்வி ஆண்டு முதல் நடப்பு கல்வி ஆண்டு வரை, பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்புகளில் எத்தன திருடுபோனது என்பது  குறித்த விவரங்களை சிறப்பு திட்டத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags : Laptop stolen, Government directive , submit report
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...